Contributors

Thursday, 19 July 2012

முருகா முருகா


முருகா முருகா

முருகா முருகா என்று சொல்லுவோம் !
சிவசக்தி வடிவேல்லனை சரணம் பாடுவோம் !
கந்தா கந்தா என்று சொல்லுவோம் –அந்த
கார்த்திகை பாலனை சரணம் பாடுவோம் !
                                     (-பல்லவி)
மூவிர கார்த்திகை பெண்களின் கைகளிலே
கதிரோலியன தவழ்திட்ட சிவபாலா!
தந்தைக்கு உபதேசம் செய்திட்டவா
தகப்பன் சாமி எங்கள் சுவாமிநாதா!
                           (-முருகா)
முக்திக்கு வித்தான முருகனவன்
எத்திக்கு புகழ் சேர்க்கும் –கந்தகுகன்
முக்கண்ணன் முக்கண்ணில் உதிர்த்த செல்வன் –அவன்
மும்மலம் அகற்றுகின்ற செல்வ முத்துகுமரன்!
                                (-முருகா)
சொல்லுக்குள் பொருளாக இருக்கின்றவா!
ஓர் உயிருக்கு உணர்வாக திகழ்கின்றவா!
என் எண்ணத்தில் எழுத்தாக பிறக்கின்றவா!
எங்கு நிறைந்திருக்கும் எழில் குமரா!
                                (-முருகா)

ஆணைமுகன் சோதரா ஆறுமுகா-தொழும்
அன்பர்கள் நேசனே உமைபாலா!
அறுபடை வீட்டினில் ஆட்சிசெய்யும்
அருள் பெரும் ஜோதியே வேற்றிவேலா!
                           (-முருகா)
சூரனை மாய்த்திட்ட சிவசுப்பிரமண்யா!
குன்றுதோறும் அமர்ந்திட்ட குணசிலா
போகருக்கருளிய சிவநேசா –நினது
பொற்பதம் பணிந்தோம்- பூமிநாதா!
                           (-முருகா)
தேவர் குறை தீர்த்த கூர்வேலா!
தேவானை வள்ளிகுறத்தி மகிழ் -மணவாளா!
தீந்தமிழில் சுவையாக திகழ்கின்ற –திருமால்மருகா!
தண்டாயுதபாணி தெய்வமே-பழனியப்பா!
(-முருகா)
ஒம் சரவணபவ எனுமோர் மந்திரம்
சன்முக நாதனின் மூலமந்திரம்
அனுதினம் உனை தொழும் அடியவர்க்கு
அருள்தனை வழங்கிடும் திருமந்திரம்
. (-முருகா)

-ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.