Contributors

Monday, 14 January 2013

ஆட்கொல்லி அருவம்



உருவமிலாதது உள்ளத்தில் உட்புகுந்ததிட்டால்-மனித
உயிரையும் பறிக்கும் வல்லமை கொண்டது,
அகண்ட காணக்த்தேயுள்ள அரும்பெருஞ் செல்வங்கள்
அக்னி குஞ்சகமர்ந்தாள் அழிவது தின்னமே!
சந்தேகத்தீ சாதி மதபேதம் பார்பதில்லை
சாத்திரம் கற்ற பண்டிதராயினும் பாமரராயினும்
பொன் மனமென்னும் கோயிலில் பெற்ற பெரும் செல்வங்கள்
பெரும் சந்தேக்த்தீயில் சிக்கி சீரழிவது தின்னமே!
ஆத்தீக்காட்பட்டோர் உற்றார் உடனபிறந்தாரையும்
ஆரூயிர் தோழனையும் தம் மனைவி மக்களையும் விடுவதில்லை
அச்சந்தேக ப்பெருந்தீயீல்  தான் அழிவது மட்டுமின்றி
அவனில் சகலத்தையும் இழப்பது தின்னமே!
மாசற்ற மனம் பெற மாசில்லா மகேசன் புகழை
முக்காலமும் ஒதுவோர்க்கு  எக்காலமும் துயரில்லை
தேனினும் இனிய திருவாசகம் தன்னை நாவினால்
தினம் இசைப்போர்க்கு எழ்பிறப்பிலும் எத்தீயும் அனுகாது தின்னமே!
                                                                             
ஆக்கம்:கிருஷ்ணவேணி உதயகுமார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.