Contributors

Saturday, 13 October 2012

சரணாகதி



சிக்கி தவிக்குதம்மா என் சிந்தை
சீக்கிரம் சிறை மீட்க வந்திடம்மா   -ஆதிசக்தி
பதிபக்தி பெருக்கினால் புலம்பும்
பிள்ளை என்னன பாராமுகம் ஏனோ  -பராசக்தி
ஆலவாயனின் அக மர்ந்துள்ள
அருட்பெரும் சக்தியே ஆனந்தவள்ளியே  -மகாசக்தி
சேயின் கூக்குரல் நினது
செவிகளில் சேரலையோ        -சிவசக்தி
விரைந்தேன் முன்னே வந்தால் என்
 வேதனை தீருமிம்மா      -வீரசக்தி
ஆயிரம் நாமங்கள் நினகுண்டு
அடியார்கள் நின்னை அழைத்திடவே  -அருட்சக்தி
அம்மா என்ற அமுதமொழி  கூறி
அழைத்திட்டேன் அவள் அகமகிழ –ஓம்சக்தி
ஒடி என் முன்னே வந்திட்டாள்
ஒப்புயர்வான வாழ்வு நல்கிடவே  -ஜயசக்தி
கவலை இனி எனக்கில்லை
கறபகவல்லி துணையிருக்க -நவசக்தி

ஆக்கம் திரு கிருஷ்ணவேணி உதயகுமார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.