Contributors

Monday, 10 September 2012

தேடல்


தேடல்

மறவுரி தரித்து கமண்டல் ஏந்தி
அடர்ந்த காட்டினுள் தேடினான் – அதை
கண்டான்! இல்லை!
சிற்றின்பங்கள் புடை சூழ்ந்த பலகோடி
மனிதர்கள் வாழும் நாட்டிலும் தேடினான் –அதை
பெற்றான் இல்லை!
எங்கே எங்கே என ஏங்கியது உள்ளம்  -அதை  
நினது தாயின் கருவறைக்குள் பெற்றாய்
என் உரைத்தது சிந்தை
சிந்தையிடம் “அத்தகைய நிம்மதி மீண்டும்
எங்கே காண்பேன் என வனவினே
நிம்மதி நிம்மதி என் கூறி எள்ளி நகைத்தது சிந்தை
அச்சிரிப்பில் சிந்தையது சூட்சகமாக
உரைத்த-பதில்.......... பதில் ............
சிறு நொடி  பொழுதில்
என் கண்கள் அகல விரிந்து  மலர்ந்தது முகம் !
நிம்மதி, நீ மதியால் நினது மனம்தனை
வென்றால் கிடைக்கும்டா பேரின்ப பெருநிம்மதி
இதுவே அதன் தாரக மந்திரம்.
                               


ஆக்கம் திரு கிருஷ்ணவேணி உதயகுமார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.