Contributors

Thursday, 13 February 2014

மழை வேண்டல்

பார்வையில் ஆயிரம் பரிதவிப்பு
பாரினில் மாந்தர் மனத்துடிப்பு
காரிரல் மேகம் கரைந்திடவே
கழனியில் நெல்மணி விளைந்திடவே
ஆட்டின் ஆசை அறிந்ட்திட்டே
ஆர தழுவி முத்த மிட்டே
கண்களில் நீர் துளி பெருகிடவே
கடவுளின் கருணையை பெற்றிடவே
பொறுமையில் பூமியை மிஞ்சினரே
பொறுத்து பெரு மழை தனை வேண்டினரே
வருணனின் வன்சினம் கலையாதோ
வாழ்வாதாரம் வந்து நிறையாதோ.
வள்ளல் என்று பெயர் எடுக்க

வருணனின் உளமென ஏற்க்கதோ.

                              ஆக்கம் கிருஷ்ணவேணி உதயகுமார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.